சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நியூ மோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், இதனை தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான துவக்க விழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கிவைத்தார்.