Skip to main content

மனநல ஆலோசனை சேவை அலைபேசி திட்டத்தை துவங்கிவைத்த அமைச்சர்!!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021
Minister launches mental health counseling service

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்துவருகிறார். வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுசெய்த பிறகு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை முத்துராஜா, கந்தர்வகோட்டை சின்னத்துரை, விராலிமலை விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கரோனா தொற்று சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “10, 15 நாட்களில் கரோனா தொற்று குறைந்துள்ளது. 62 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. 3வது அலை வராது, வந்தாலும் அதனை எதிர்கொள்ள, முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி அனைத்தும் தயாராக உள்ளது. 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன. அதேபோல மாவட்டத் தலைநகரங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் தயாராக உள்ளன. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் 28 ஆக்சிஜன் படுக்கையுடன் 100 படுக்கைகள் தயாராக உள்ளன. இதேபோல திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சிறப்பு வார்டுகள் உள்ளன. தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறும் போது "புதுக்கோட்டை பல் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் தொடங்கப்படும்.

 

அதேபோல ஒப்பந்த மருத்துவ பணியாளர்களுக்கான தினக்கூலி கிடைக்கவில்லை என்ற புகார் வந்தது. அதுபற்றி மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்". நீட் தேர்வு விலக்கு பற்றிய கேள்விக்கு "ராஜன் குழு ஆய்வு செய்துவருகிறது" என்றார். மேலும் தமிழ்நாட்டிற்கு 12.36 கோடி தடுப்பூசி தேவை இருந்தது. இப்போதுவரை கிடைத்தது போக, 10.20 கோடி டோஸ் தடுப்பூசிகள் வரவேண்டியுள்ளன. அடுத்து முக்கியமாக கரோனா சிகிச்சைக்கு சென்று இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் கரோனா இறப்பு என்று பதிவாகவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

சிகிச்சைக்கு சேரும்போது பாசிட்டிவ் இருக்கலாம். ஆனால், சில நாளில் நெகட்டிவாகி இணை நோய்களால் இறக்கலாம். மேலும், இறப்பு சான்றிதழில் காரணம் குறிப்பிடுவதில்லை என பலரும் கூறுகின்றனர். அதாவது கரோனாவால் இறக்கும் அனைவருக்கும் நிவாரணம் இல்லை. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத்தான் நிவாரணம்” என்று கூறினார். தொடர்ந்து மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் 'மீண்டு வருவோம்' என்ற மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கான மனநல ஆலோசனை சேவை அலைபேசி திட்டத்தை தொடங்கிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.