இன்று (08.10.2021) சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே. சேகர் பாபு பிரத்யேக இணையவழி திட்டத்தை துவங்கிவைத்தார். இந்நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு இணையவழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை தொடங்கிவைத்தார்.