Skip to main content

முருக பக்தர்களுக்காக 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனை; துவக்கி வைத்த அமைச்சர்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Minister launched sale of 200 grams of Panchamirtha for  devotees of Murugan

தமிழகத்தில் அரசு சார்பில் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்ந்தால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்த பிரசாதத்தை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரை கிலோ எடை கொண்ட பஞ்சாமிர்தம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பக்தர்கள் வசதிக்காக புதிதாக 200 கிராம் அளவில் 20 ரூபாய்க்கு பஞ்சாமிர்தம் விற்பனையை துவங்கியுள்ளது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பஞ்சாமிர்த விற்பனையை துவக்கி வைத்தார். மேலும் பக்தர்கள் வசதிக்காக படிப்பாதையில் 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல் உதவி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பழனி கோயில் சார்பில் துவங்கப்பட உள்ள மனநல காப்பகத்தையும் உணவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்  அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அதன் பின் செய்தியாளரிடம் பஅமைச்சர் சக்கரபாணி பேசும் போது, “பழனி முருகன் கோவிலை அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு திருப்பதி போல் மாற்றுவதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் தைப்பூசம், பங்குனி உத்திர நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர். பக்தர்கள் பழனிக்கு வரக்கூடிய வழியிலான திண்டுக்கல் சாலை, பொள்ளாச்சி சாலை மற்றும் தாராபுரம் சாலையில் பக்தர்களுக்கு தேவையான கழிவறைகள் குளிக்கும் இடம் மற்றும் தங்கும் இடம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார். 

ஒன்றிய அரசு மலிவு விலையில் அரிசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது பற்றி கேட்டதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி, தமிழகத்தில் முதலமைச்சர் கலைஞர் ரேஷன் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு அரிசி விநியோகம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது விலை இல்லாமல் ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த காலத்தில் தமிழகத்தில் 370 அரிசி ஆலைகள் இயங்கி வந்தது, தற்போது 700 அரிசி ஆலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு மாதத்திற்கு 6 லட்சம் மெட்ரிக்டன் அரிசி அரைக்கக் கூடிய வகையில் இருந்தது. தற்போது மாதத்திற்கு 12 லட்சம் மெட்ரிக்டன் அளவுக்கு அரிசி அரைக்கக்கூடிய வகையில் கட்ட மைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனைத்து அரிசி அரைக்கக் கூடிய ஆலைகளிலும் கருப்பு பழுப்பு நீக்கக்கூடிய வகையில் நவீன இயந்திரம் 50 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக தரமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி உள்ளிட்ட இடங்களில் அரசு தனியாருடன் இணைந்து  அரிசி அரைக்க கூடிய ஆலைகள் துவங்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த உடன் அரசு சார்பில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அரிசி பற்றாக்குறையை தவிர்க்க 10 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் முப்பத்து ஐந்து ரூபாய் நாற்பது பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 32 மாதங்க ளாக தரமான அரிசி ரேஷன் கடைகள் மூலம் வலியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

ஒரு நெல்மணி கூட வீணடிக்கப்படாத சூழல் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டத்தின் பேரில் 4 லட்சம் மெட்ரிக்டன் அளவுக்கு இருப்பு வைக்கக்கூடிய வகையில் 400 கோடி ரூபாய் செலவில் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மழைக்காலத்தில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி வீணானது தற்போது ஒரு நெல்மணி கூட வீணடிக்கப்படாத சூழலை அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் உணவுத்துறை அமைச்சர் ஆன தனது தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் எந்த உணவுப் பொருள் விலை உயர்ந்தாலும் அவற்றை வாங்கி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரிசி விலை உயர் ந்தால் அதை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.