Skip to main content

ஆவின் பாலுடன் இனி அறத்துப்பால்! -அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ட்வீட்!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

அதிரடி பேச்சுக்குச் சொந்தக்காரரான தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அவ்வப்போது வெளியிட்டு வரும்  கருத்துகள் சில நாட்கள் பரபரப்பாக பேசப்படும். அதன் பிறகு, கால ஓட்டத்தில் காணாமல் போய் விடும்.

அந்த வகையில்,  ஆவின் பால் பாக்கெட்டுகளில்  ‘திருக்குறள்’ அச்சிட்டு வினியோகிப்போம்; திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம் என,  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சரின் ஒப்புதலை பெற்ற பிறகு இத்திட்டம் அமுலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

admk

 

இதனை வரவேற்று  பாஜக சமூக ஊடக பிரிவு தலைவர் நிர்மல் குமார்  ‘இதன்மூலம் ஒவ்வொரு இல்லத்திலும் திருக்குறளை எளிமையாகக் கொண்டு சேர்க்க முடியும்’ என பின்னூட்டம் செய்து, தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.  

கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ட்வீட்டுக்குப் பின்னூட்டமாக வந்திருக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

‘திருக்குறளை தமிழ்ல அச்சடிப்பீங்களா? இல்ல இந்தியில போடூவீங்களா? இப்பவே தெளிவா சொல்லிடுங்க’ என ஒருவர் கேட்டிருக்கிறார்.


 ‘அப்படியே ஆத்திசூடியையும் முயற்சிக்கலாமே..’  என மற்றொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 ‘அரசுப்  பேருந்துகளில் உள்ளது போல் ஒரே குறளை அச்சிடாமல் இருப்பின் நன்று" என்று மற்றொருவர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.


"ஐடியா  நல்லா தான் இருக்கு.. ஆனா காலி பாக்கெட்டுகள் குப்பைக்கல்லவா போகும் ? அதனால் பயன் இல்லையே?" என மற்றொருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


அதேபோல்  ‘ஆவின் பால் கவரில் நாட்டு மாட்டின் புகைப்படத்தைப் போடுங்க. இப்ப உள்ள பாரின் மாட்டின் புகைப்படம் வேண்டாம்" என  ஒருவர் மனக்குமுறலை வெளியிட்டிருக்கிறார்.

அந்த ட்விட்டர் பக்கத்தில், ஒரு சிலரே  ஆவின் பால் கவரில் திருக்குறள் அச்சிடும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான கருத்துகள் எதிர்மறையானவையே!

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமா? வராதா? தமிழக அரசுக்கே வெளிச்சம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு சாலியர் மகாஜன சங்கம் ஆதரவு! - ராஜேந்திரபாலாஜி வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Saliyar Mahajana Sangam support for Vijaya Prabhakaran

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும்  வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப்  பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக  வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  

சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார்.  தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.  

Next Story

“விஜயபிரபாகரன் பெயரிலேயே பெரிய ராசி இருக்கிறது” - ராஜேந்திரபாலாஜி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் அறிமுகக் கூட்டம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், தனது வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இந்தத் தொகுதிக்குள் தான் எய்ம்ஸ் மருத்துவமனை, காமராஜர் பல்கலைகழகம், ஏர்போர்ட் எல்லாமே வருகிறது. எனவே  இவை நமக்குத்தான் சொந்தம். மொத்தத்தில் தென்மாவட்ட மக்களின் கெப்பாசிட்டி தம்பி விஜய பிரபாகரன் கையில் உள்ளது. இவர் வெற்றிபெற்று எம்.பி. ஆவதை இனி யாராலும் தடுக்க முடியாது. தமிழர்களின் உரிமைக்காகவும் பெருமைக்காகவும் உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி ராசியான கூட்டணி. தற்பொழுது உள்ள எஸ்.டி.பி.ஐ. இஸ்ஸாமிய அமைப்புகளில் மிகவும் வலிமையானது. அந்த அமைப்பு நமக்கு வலுவான துணையாக நிற்கிறது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதம் பார்க்காமல் அனைவருக்கும் உழைத்த கட்சி அ.தி.மு.க. எங்களை இனத்தை, சொல்லி மதத்தைச் சொல்லி பிரிக்க முடியாது. சிவகாசியில் பேசிய இ.பி.எஸ். ஓங்கிய குரலில் கொட்டும் முரசுக்கு ஓட்டு கேட்டு முழங்கினார். அது டெல்லி வரைக்கும் ஒலித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிக்கு மரியாதை கொடுத்து அங்கீகரிக்கக் கூடிய கட்சி அ.தி.மு.க.. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழுக்காகப் பெருமை சேர்த்தவர். நாங்கள் தற்போது கூட்டணியில் இல்லாவிட்டாலும், அவர் அ.தி.மு.க. கூட்டணியில்தான் முதன் முதலில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

கூட்டணி என்றாலே முதலில் அமர்ந்து பேசிவிட வேண்டும். தொகுதிகள் சின்னம் ஆகியவற்றைச் சரியாக முடிவு செய்யவேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயரில் பெரிய ராசி இருக்கிறது, வசியம் இருக்கிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும் அவர் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அவர் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். நாளை முதல் தொகுதியில் 100 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேர்தலில் பிரச்சாரமே வேண்டாம் என்று ஒரு அணியும், ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்க என்று ஒரு அணியும் சுற்றித் திரிகிறது. விஜயபிரபாகரன் வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணி கடுமையாக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். கூட்டணிக்  கட்சித் தலைவர்கள், அவருடைய வெற்றிக்குப் பாலமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தேவையானவற்றை அ.தி.மு.க. இயக்கம் செய்யும். அதற்கு நான் முழு பொறுப்பு. தம்பி விஜய பிரபாகரன் பொறுப்பு. அதிமுக அடுத்து ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.