Advertisment

‘எடப்பாடியாரை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு.. தொண்டு செய்ய ஆணையிட்டுவிட்டு..’ - கே.டி.ராஜேந்திரபாலாஜி எழுதிய இரங்கல் கவிதை!

minister kt rajendra balaji tweet cm edappadi palanisamy mother incident

Advertisment

இன்று நள்ளிரவு கடந்து, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வாட்ஸ்-ஆப்பில் இருந்து, கண்ணீர் அஞ்சலி படம் ஒன்று வந்தது.

கடந்த 13- ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தானைத் தலைவரை பெற்றெடுத்த தாய் தவுசாயம்மாள் மறைந்தார்’ என்று பதிவிட்டிருந்த ட்வீட்டை தொடர்ந்து, தற்போது மேலும் சில வரிகளைச் சேர்த்து, ராஜேந்திரபாலாஜியே எழுதியிருக்கும் வசன நடையிலான கவிதையாம் இது-

minister kt rajendra balaji tweet cm edappadi palanisamy mother incident

தங்க மாங்கனியைப் பெற்றெடுத்த

தங்கமகள் தவுசாயம்மாள் மறைந்தார்

என்ற செய்தி அண்ணன் எடப்பாடியார்

அவர்களுக்கு மட்டும் பேரிழப்பு அல்ல!

எனக்கும்தான்,எங்களுக்கும்தான்!

சிலுவம்பாளையம் கண்ணீரில்

நனைகிறது. மக்கள் நெஞ்சங்களில்

ஏக்கப் பெருமூச்சு எண்ணங்களை

சிதறடிக்கிறது.

Advertisment

minister kt rajendra balaji tweet cm edappadi palanisamy mother incident

தாயே தவுசாயம்மாள் அவர்களே!

அண்ணன் எடப்பாடியாரை எங்களிடம்

ஒப்படைத்துவிட்டு தமிழ்நாட்டிற்கு

தொண்டு செய்ய ஆணையிட்டுவிட்டு

ஆண்டவனின் திருவடி நிழலில்

இளைப்பாற சென்றாயோ தாயே!

உங்கள் ஆத்மா அமைதியாகட்டும்!

உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்!

வாய்ப்பேச்சில் ‘பொளந்து’ கட்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கவிதையும் எழுத ஆரம்பித்திருக்கிறார்!

cm palanisamy Tweets minister rajendra balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe