Advertisment

குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த அமைச்சர்

minister kn nehru water tank opening ceremony in trichy municipal corporation 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10வது வார்டு வள்ளுவர் தெருவில் ரூபாய் 3.35 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும், அதனைத்தொடர்ந்து கேனக்கரை ரோடு செல்வமுத்துமாரியம்மன் கோயில் தெருவில் ரூபாய் 1 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும்பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்துபஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

water trichy
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe