Skip to main content

 "ஸ்ரீரங்கத்தில் அவர் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி அடைந்தேன்" - அமைச்சர் கே.என்.நேரு

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

minister kn nehru talks about srirangam mla palaniyandi victory

 

திருச்சி மாவட்டம் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சோர்ந்த 174 குடியிருப்புகளுக்கான 124 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சேதுராப்பட்டியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.

 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, "திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்னும் 6 மாத காலத்திற்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். குறிப்பாக தேர்தல் சமயங்களில் ஸ்ரீரங்கம் தொகுதியில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் தற்போது மொத்தம் 7.5 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குடிநீர் விநியோகிக்க 528 இடங்களில் போர்வெல்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் குடிநீர் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் நிதி மற்றும் மாநில அரசின் நிதி என மொத்தம் 30 ஆயிரம் கோடியை தமிழக அரசு இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது.

 

ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். ஒரு காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியை வெற்றி பெறவே முடியாத நிலை இருந்தது. 1989ல் தீட்சிதர் வெற்றி பெற்றார். 1996ல் மாயவன் வெற்றி பெற்றார். அதன்பிறகு பழனியாண்டி வெற்றி பெற்றுள்ளார். நான் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி அடைந்ததை விட அவர் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார்.

 

minister kn nehru talks about srirangam mla palaniyandi victory

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 15.36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தை திறந்து வைத்தார். தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 6 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.38.04 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்கள் வழங்கினார். வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இடுபொருள் மானியம் மற்றும் விதை தெளிப்பான்கள், தார்பாய் மானியம் வழங்குதல் என மொத்தம் 43.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.