Skip to main content

“சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க பணிகள் நடைபெற்று வருகிறது” - அமைச்சர் கே.என். நேரு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

minister kn nehru said Works are underway prevent rain and flood damage Chennai

 

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ. 937 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

 

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து நடத்திய வெள்ளம் குறித்த ஒத்திகைப் பயிற்சியினை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார். 

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.என். நேரு, “சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ. 937 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகளில் குடிநீர் குழாய்கள், மின்சார வயர்கள் செல்வதன் காரணமாக பணிகள் சற்று மந்தமாக செல்கிறது. விரைந்து முடிக்க தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை 576 சாலை பணிகள் நடைபெறுகிறது. இதில் இதுவரை 276 சாலை பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது. மீதமுள்ள  சாலை பணிகளும் விரைந்து முடிக்கப்படும்" என்றார்.

 

minister kn nehru said Works are underway prevent rain and flood damage Chennai

 

கடந்த நான்கு தினங்களாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருச்சி முக்கொம்பு  மேலணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,95,000 கன அடியாக உள்ளது. இதில் காவிரி ஆற்றில் வினாடிக்கு  62, 000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1,33,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே காவிரி, கொள்ளிட ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆறுகளில் இறங்கி குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாதெனவும் எச்சரித்துள்ளது.

 

minister kn nehru said Works are underway prevent rain and flood damage Chennai

 

இந்த நிலையில் திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய நபரை எவ்வாறு மீட்பது என்பது குறித்த டெமோ செய்து காட்டியதன் வாயிலாக திருச்சி மாவட்ட தீயணைப்பு  துறை எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளது என்பதை எடுத்துக் காட்டினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.