திருச்சிராப்பள்ளி மாவட்டம் , லால்குடி வட்டாரம், புதூர் உத்தமனூரில் ரூபாய் 38 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை வேளாண்மைவிரிவாக்க மையகட்டடத்தினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர், தி. இரவிச்சந்திரன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் முருகேசன், க.வைரமணி மற்றும் வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.