திருச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில், ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பல தட்டுகள் கொண்ட காற்று உலர்த்தி அமைப்பினை உள்ளடக்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்காவிரிஆறுமற்றும்கொள்ளிடம்ஆற்றை நீராதாரமாகக்கொண்டு தினமும் 135மில்லியன்லிட்டர் குடிநீர்உந்தப்பட்டு மாநகரம்முழுவதும்136மேல்நிலைதீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம்பொதுமக்களுக்குகுடிநீர் வினியோகம்செயப்பட்டுவருகிறது.
கொள்ளிடம்ஆற்றில் இருந்து கலெக்டர்வெல்எண்-3ல்இருந்துபெறப்படும் குடிநீர் கோ.அபிஷேகபுரம் கோட்டப்பகுதியில் அமைந்த11மேல்நிலைநீர்தேக்கத் தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது. இக்குடிநீரானது செந்நிறமாக இருப்பதால்பொதுமக்களிடம் இருந்துபுகார்கள்வந்தவண்ணம்இருந்தது. இதனையடுத்து,குடிநீர் வழங்கல்பொறியாளர்கள் மற்றும்நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டம்நடத்தப்பட்டடது.
அதன்படி, காவிரிக் கரையில் அய்யாளம்மன் படித்துறைஅருகில்,பலதட்டுகள்கொண்ட காற்றுஉலர்த்தி அமைப்பைஉருவாக்கி,மேலும் இரும்புத்தாதுவை வடிகட்டி, குடிநீரை சுத்திகரிப்புசெய்யும்நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் ரூ.5கோடி மதிப்பீட்டில்தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தஆய்வின் போது மாநகராட்சிஆணையர் முஜிபுர்ரகுமான், செயற்பொறியாளர் பி.சிவபாதம் மற்றும்பலர்உடனிருந்தனர்.