minister jayakumar pressmeet at chennai

Advertisment

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எழவில்லை. அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து சட்டமன்ற தேர்தலைசந்திக்க வேண்டும். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம் என தலைமை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது" என்றார்.

இதனிடையே, அதிமுக கூட்டத்தில் கராசார விவாதம் நடந்ததா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை; கட்சியில் கருத்து வேறுபாடும் இல்லை என கூறினார்.

Advertisment