சி.பா. ஆதித்தனாரின் 116- வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நாங்கள் இணைந்திருந்து அடுத்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். முதல்வர் வேட்பாளர் பற்றி முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏற்கனவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படியே செயற்குழு நடக்கிறது; வேறு எந்த காரணமும் இல்லை" என்றார்.