Skip to main content

இலவுகாத்த கிளியாக ஸ்டாலின், வால் அறுந்த நரியாக தினகரன்... -ஜெயக்குமார்

Published on 29/10/2018 | Edited on 29/10/2018

 

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

ரஜினியைக் கண்டு பயப்படுபவர்கள் திமுக காரர்களாகத்தான் இருக்கமுடியும். ரஜினி கட்சி தொடங்கினால் கவலைப்படவேண்டியது திமுகதான்.  ரஜினி கட்சி தொடங்கினாலும், அதிமுகவின் வாக்கு வங்கியில் கைவக்க முடியாது. சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியிட்ட நபர்மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்.   எறும்பு ஊற பாறை தேயுமா என்ற கேள்விக்கு இலவுகாத்த கிளியாக ஸ்டாலினும், வால் அறுந்த நரியாக தினகரனும் உள்ளனர் என கூறியுள்ளார். சேலம் சிறுமி கொலை வழக்கு குறித்த கேள்விக்கு குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்