ADVERTISEMENT
சுனாமி தாக்கியதின் 16- வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீன்பிடி இறங்கு தளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும், கடலில் பாலை ஊற்றியும் பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ADVERTISEMENT
சென்னையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சிறு மோட்டார் படகின் மூலம் கடலினுள் பயணம் செய்து கடலில் மலர் தூவியும் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார். பின் கரையிலும் சுனாமியால் இறந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
Show comments