Skip to main content

அதிசயம், அதிர்ஷ்டம் எல்லாமே நாங்கதான்...- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி  

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

நேற்று சென்னையில் நடைபெற்ற 'கமல் 60'  நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எங்களின் கொள்கைகள், சித்தாந்தங்கள் மாறலாம். ஆனால் எங்கள் இருவரின் நட்பு எப்போதும் தொடரும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வராவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நான்கைந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அதுபோல தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும்” என்று கூறியிருந்தார்.

 

minister jayakumar interview

 

இந்நிலையில் ஆளுநரை சந்தித்த பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,

யார் வேண்டுமானாலும் அதிசயத்தை, அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கலாம் ஆனால் நாங்கள் நம்புவது மக்களை. மக்கள்தான் இறுதி எஜமானர்கள். முக்கியமாக 2021ல் மீண்டும் ஒரு அதிசயத்தை கொண்டுவர போகிறார்கள் அது மீண்டும் அதிமுக ஆட்சி என்பதுதான். இந்த அதிசயத்தைதான் ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார் போல.

அதிமுகவையே தொடர்ந்து இவர்கள் விமர்சிக்க காரணம் பழுத்த மரம்தான் கல்லடி படும். இன்று யாராக இருந்தாலும் சரி எங்களை தொட்டால்தான் பெரிய பிம்பமாக வெளியே தெரிவார்கள். நாங்கள் பெரிய இடத்தில இருப்பதால் எங்களை மையப்படுத்தி பேசினால்தான் வளர முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது எனவேதான் எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதனால் அவர்கள் தூரம்தான் போகமுடியும் தவிர எங்கள் பக்கம்கூட வரமுடியாது.

எந்த அதிசயமும் நடக்காது, அதிர்ஷ்டமும் நடக்காது. அதிர்ஷ்டமும், அதிசயமும் நாங்கதான் எல்லாம். நண்பர் கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். 6 சதவிகித வாக்குகளை பெற்று அவருடைய சக்தியை காட்டிவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் இப்போ வருகிறேன் அப்போ வருகிறேன் என்று அரசியல் சமுத்திரத்தில் குதிக்கலாமா? வேண்டாமா? என்ற மைண்ட் தாட்டில் இருக்கிறார். முதலில்  ரஜினிகாந்த்  அரசியல் சமுத்திரத்தில் குதிக்கட்டும் பிறகு ஒன்றாக சேரட்டும். அதன்பிறகு அவர்கள் என்னமாதிரியான கருத்துக்கள், கொள்கைகள் போன்றவற்றை மக்களிடம் முன்வைக்கிறார்கள் என்பதில்தான் எங்கள் தரப்பு கருத்துக்கள் வெளிப்படும். இது சரியான நேரம் அல்ல. எத்தனை பேர் ஒன்று சேர்த்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.