Skip to main content

மெஸ்ஸி - ரொனால்டோ போல், திமுக - அதிமுக இடையே தான் போட்டி: ஜெயக்குமார் பேட்டி

Published on 26/06/2018 | Edited on 26/06/2018


எப்படி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி - ரொனால்டோ இடையே தான் போட்டி உள்ளதோ, அது போல தமிழக தேர்தல் களத்தில் அதிமுக - திமுக இடையே தான் போட்டி உள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,

எப்படி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி - ரொனால்டோ இடையே தான் போட்டி உள்ளதோ, அது போல தமிழக தேர்தல் களத்தில் அதிமுக - திமுக இடையே தான் போட்டி உள்ளது. தமிழக அரசியலில் இடையில் நுழைந்துள்ள யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது.

தூய்மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தவே மாவட்டந்தோறும் ஆளுநர் செல்கிறார். ஆட்சி அதிகாரத்தில் அவர் தலையிடுவது இல்லை. ஆளுநர் தனது வேலையில் ஈடுபட்டுள்ளார், தமிழக அரசும் தனது வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் பேசக்கூடாது என்று 1999ஆம் ஆண்டில் தி.மு.க.தான் விதிகளை மாற்றியது என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்