துப்பாக்கி சூடு சம்பவம்தொடர்பாகசென்னை அருகே மேடவாக்கத்தில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனைபோலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் மகாலில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்ததமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது.திமுக ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்பு அதிகமாக இருந்தது. திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று கூறினார்.