Skip to main content

“தேவாங்கர் பள்ளி வளாகத்தில் கல்லூரி கொண்டுவரக் கூடத் தயாராக இருக்கிறேன்” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Minister I.Periyasamy give free bicycle to school students in Dindigul

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னாளபட்டி, மணலூர், சித்தரேவு, சித்தையன்கோட்டை, வீரக்கல், பஞ்சம்பட்டி, செட்டியபட்டி, முருகம்பட்டி, உட்பட 13 கிராமங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

 

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை, செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பாறைப்பட்டி ராமன், முருகேசன், ஆசிரியர் காசிராஜன், தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாரூதீன் வரவேற்றுப் பேசினார். 

 

விழாவில் மாணவ மாணவியருக்கு 874 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிவிட்டு மாணவர்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “இந்த விழா நடக்கும் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கு கல்வியை வழங்கியது இந்த பள்ளிதான். சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உயர் பதவியில் உள்ளார்கள். பள்ளியைக் கொண்டு வந்த எல்.கே.பி. லகுமையா செட்டியார், டி.எஸ்.வி. தியாகராஜன், ஏ.எம்.டி. நாச்சியப்பன் போன்றவர்களின் அர்ப்பணிப்பால் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி உருவாகி இன்று உயர்ந்த நிலையில் உள்ளது. 

 

தேவைப்படும் என்றால் சின்னாளபட்டியில் வசிக்கும் கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவிகள் நலன் கருதி தேவாங்கர் பள்ளி வளாகத்தில் கல்லூரியைக் கூட கொண்டுவர நான் தயாராக உள்ளேன். காரணம் நான் மாணவ பருவத்திலிருந்து இந்த பள்ளியை பார்த்து வருகிறேன். பல விளையாட்டு போட்டிகளை நடத்தி திறமையான விளையாட்டு வீரர்களையும், சிறந்த ஆசிரியர்களையும் உருவாக்கியது தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஒற்றுமையுடன் படித்து மேன்மையான நிலைக்கு வரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். நான் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1989ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட நாள் முதல் இன்றுவரை 33 வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சின்னாளபட்டியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள்தான். இன்று அமைச்சராக உள்ளேன், இதை நான் என்றும் மறக்கமாட்டேன். சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.