Advertisment

மெட்ரோ ரயில்: ஆய்வு செய்த அமைச்சர்… மாற்றங்களை அறிவித்தார்…

Advertisment

7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் எம்.சி.சம்பத் அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 8 மணிக்குபதிலாக 7 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அதுபோல காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. க்யூ.ஆர். வழிமுறையில் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரெயில் சேவைக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Metro
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe