சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (19/11/2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

இந்த ஆய்வின் போது, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என்.எழிலன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.