Skip to main content

“போதைப்பொருள் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” - அமைச்சர் ஐ. பெரியசாமி 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Minister i periyasamy speech at dindigul

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்ளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, முதன்மை கல்வி அலுவலர் அசாருதீன், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

நிகழ்ச்சியில், அமைச்சர் ஐ.பெரியசாமி போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு விதிமுறைகளை வாசிக்க, அரசுத் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், உள்ளாட்சி பிர திநிதிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், 203 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார். 

 

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியதால் கடந்த 10 வருடங்களாக புரையோடிய போதைப் பொருள்கள் புழக்கம் இன்று தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பள்ளியின் வளர்ச்சியில் தலைமையாசிரியர், ஆசிரியர், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரின் பங்கு அதிகம் உள்ளது. 

 

ஒரு சமுதாயத்தின் அடித்தளம் பள்ளியில் தான் உருவாகுகிறது. திருமலைராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு எல்லா வகைகளிலும் நாம் உறுதுணையாக இருந்துள்ளோம். தி.மு.க. ஆட்சியின் போது 10 வருடங்களுக்கு முன்பு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதிலிருந்து, கட்டிடங்கள் அமைப்பதிலிருந்து அனைத்திற்கும் நிதி உதவி வழங்கியுள்ளோம். இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிவதால் தலைசிறந்த பள்ளியாக இந்த பள்ளி உள்ளது. மாணவர் மத்தியில் ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பழக்கத்தின் விளைவுகள் தெரியாமல் மாணவர்கள் பழக்கதை ஏற்படுத்திவிட்டு அதனை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்படுத்திவிடும். 

 

இளம் வயதில் மாணவர்கள் அறியாமல் பழகும் இந்த போதை பழக்கவழக்கம் மாணவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தாரையும் பாதிக்கும். மாணவர்கள் மட்டுமின்றி உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் போதைப்பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி  எதிர்கால சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் கடமையும் அவர்களுக்கு உள்ளது. நல்ல உடல் நலத்துடன் மாணவர்கள் வாழ்ந்து உயர்கல்வி கற்க வேண்டும் என்று மாணவ சமுதாயத்தை வாழ்த்துகிறேன். தமிழக அரசால் வழங்கப்படும் மிதிவண்டியை அவர்கள் பயன்படுத்தி நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.