Skip to main content

“நிலையான கல்வி தான் கடைசிவரைக்கும் இருக்கும்!”  - பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Minister I. Periyasamy at the graduation ceremony

 

திண்டுக்கல்லில் உள்ள பிரபல ஜி.டி.என். கல்லூரியில் 52வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் துரை முன்னிலை வகித்தார். இந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 681 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

 

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கல்வி என்பது மாணவ, மாணவிகளுக்கு முக்கியம். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்ற சிந்தனையில் நாம் படிக்கிறோம். அது போல் படித்து முடித்துவிட்டு உடனே அரசு வேலைக்கு போக வேண்டும் என்றும் நினைக்கிறோம். அதுபோல் தனிப்பட்ட தொழிலை செய்யலாம் என்று கூட இருப்பார்கள். 

 

இந்த கல்லூரியில் பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. சட்டக்கல்லூரி கூட அடுத்த ஆண்டு வரவிருக்கிறது. அதுபோல் Ph.d. படிக்கக்கூடிய ஆராய்ச்சி மாணவர்கள் கூட இங்கு வந்து படித்துவிட்டு போகிறார்கள். அந்த அளவுக்கு கல்லூரியின் தரம் உயர்ந்திருக்கிறது. 

 

 

Minister I. Periyasamy at the graduation ceremony

 

கூட்டுறவுத் துறை மூலம் கொடைக்கானலில் அடுத்த ஆண்டு ஆராய்ச்சி கல்லூரி தொடங்க இருக்கிறது. கூட்டுறவுத்துறை மூலம் நிதி பட்ஜெட் போடும் அளவுக்கு கேரளாவில் வங்கிகளில் பல லட்சம் கோடிகள் இருக்கு. அந்த அளவுக்கு கூட்டுறவுத் துறை வளர்ந்துள்ளது. அது போல் தமிழகமும் சிறந்த மாநிலமாக உருவாகும். இந்த கல்லூரி தாளாளர் ரத்தினம் கட்டுப்பாட்டுக்கு வந்ததிலிருந்து கல்லூரி தரமும் உயர்ந்து இருக்கிறது. சானிட்டரி இன்ஸ்பெக்டர் வேலைக்கு மாணவ மாணவிகள் படிக்க வேண்டுமென்றால் காந்தி கிராமத்தில் தான் போய்படிக்க வேண்டும். நான் கூட 150 மாணவர்களை சேர்த்து விட்டு, அவர்கள் தற்போது வேலைக்கும் சேர்ந்துவிட்டார்கள். அப்படி  உடனே வேலைக்கு போகக்கூடிய சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பு கூட இந்த கல்லூரியில் இருப்பதால் மாணவ மாணவிகள் படித்த உடன் அரசு வேலைக்கு போக வாய்ப்பு இருக்கிறது. படித்தவுடன் வேலைக்கு செல்லக்கூடிய நர்சிங் கோர்ஸ் இங்கே இருக்கிறது. இப்படி அனைத்து துறைகளுக்கும் போகக் கூடிய படிப்புகளும் இக்கல்லூரியில் இருக்கிறது. 

 

ஒன்றே ஒன்று, தனியார் மருத்துவக்கல்லூரி மட்டும்தான் இல்லை. அதையும் கொண்டு வரவேண்டும் என்றுதான் தாளாளர் ரத்தினம் நினைக்கிறார். ஒரு கல்லூரியின்   வளர்ச்சிக்கு கட்டுப்பாடு தான் முக்கியம். அது இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மூலம் தெரிகிறது. அந்த அளவுக்கு நல்ல மாணவர்களை உருவாக்கக்கூடிய கல்லூரியாக இந்த ஜி.டி.என் கல்லூரி திகழ்ந்துவருகிறது. 

 

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எந்த ஒரு செல்வமும் நிலையானது இல்லை. ஒருவருக்கு பொன், பொருள் அழிந்தாலும் கூட கல்வி தான் நிலையாக கடைசி வரைக்கும் இருக்கும். அதனால், மாணவ-மாணவிகளுக்கு கல்வி தான் முக்கியம். மாணவ, மாணவிகள் புத்தகத்தை மட்டும் படிக்காமல் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனித்தாலே நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறலாம். அனைத்து இடங்களிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் அனுபவமிக்க பேராசிரியர்கள் இருப்பதால் எதிர்காலத்தில் இன்னும் இக்கல்லூரி உயர வேண்டும்” என்று கூறினார்.

 

Minister I. Periyasamy at the graduation ceremony

 

இந்தப் பட்டமளிப்பு விழாவில், கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, ஜி.டி.என். கல்லூரி தாளாளர் ரத்தினம் மகனும் மாநகராட்சி மன்ற உறுப்பினருமான வெங்கடேஷ், மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, ஜெயன். சத்தியமூர்த்தி, நெடுஞ்செழியன் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

கட்சி பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister I.Periyasamy consultation with party officials!

ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவால் ஆத்தூர் தொகுதியில் கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமைச்சரின் உத்தரவுப்படி மகளிர் அணியினர், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 45 வருடங்களாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்த திமுகவினர் முதல் முறையாக கூட்டணி கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்திய கூட்டனியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டனியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றிக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணி ஆற்றிவருகிறார்.

Minister I.Periyasamy consultation with party officials!

அத்தோடு, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் ஆத்தூர் தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் பம்பரம்போல் சுழன்று தேர்தல் பணியாற்றி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வைத்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் உட்பட சில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து   சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதோடு நமது வெற்றி இந்திய அளவில் பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு நீங்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.