Skip to main content

“பெரியார் மண் என்றைக்கும் அடி பணியாது” - அமைச்சர் துரைமுருகன்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Minister Duraimurugan spoke about BJP

 

திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய மத நல்லிணக்க மாநாடு வேலூர் கோட்டை பூங்கா அருகே நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திராவிட நட்புக் கழக நிறுவனர் சுப. வீரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சிங்கராயர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,  சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கருத்துரையாளர்களாக அனைத்து மதத்தைச் சார்ந்த மத குருமார்களும் கலந்துகொண்டனர்.

 

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், “வேலூரில் எது நடந்தாலும் அது வெற்றி பெறும். இந்திய விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்டு முதல் கொடியை ஏற்றியதும் இதே வேலூர் தான். பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததும் வேலூரில் தான். திராவிடர் கழகம் பிறந்ததும் வேலூரில் தான். ஏழு எம்எல்ஏக்கள் கிடைக்க வழி செய்ததும் வேலூர் தான்” என்றார். நேருவின் சுயசரிதை புத்தகத்தை மேடையில் படித்துக் காட்டிய துரைமுருகன், “திராவிடம் பற்றி மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘பண்பாடும் நாகரிகமும் பண்டைய இந்தியா’ என்ற கோசாம்பி என்பவர் எழுதிய புத்தகத்தில் நேருவின் கருத்துக்கு எதிர் கருத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் திராவிடர் என்ற வார்த்தையை இவர் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. தமிழர், தெலுங்கு உள்ளிட்ட அடையாளங்களையே மறைத்து பிஜேபி என்ற ஒன்றை மட்டும் நிலை நிறுத்துகிறார்கள். நமது அடையாளம் மறைக்கப்பட்டு வருகிறது.

 

இந்தியாவில் வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. இந்து மாதம் மட்டும்தான் இருக்கணும் அதிலும் சனாதனம் மட்டும் தான் இருக்க வேண்டும். அதிலும் பார்ப்பனர்கள் கொள்கையோடும் ஜாதியோடும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 11:00 மணி வரைக்கும் ஓட்டு போடுவது டல்லாக இருந்தது. காஷ்மீர் பிரச்சனை வெளிவந்த பிறகு மடமடவென ஓட்டை போட்டுவிட்டோம்.

 

ஒன்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் அடிபணிந்து விடுவார்கள்; ஆனால் இந்த பெரியார் மண் என்றைக்கும் அடிபணியாது. சிறுபான்மையினர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், வேறு யாராக இருந்தாலும் சரி என்றைக்கும் உங்கள் உடைமையை, உயிரைக் காப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.  சுப. வீரபாண்டியன் நினைத்தால் எம்எல்ஏவுக்கு நிற்கலாம். ஆனால் அவருக்கு எந்த ஆசையும் இல்லை.” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.