Skip to main content

“மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” - அமைச்சர் துரைமுருகன்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Minister Duraimurugan has said  there  no room for compromise regarding the Mekedatu Dam issue

 


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்ட குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஜீன் 1ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்டத்தில் தற்போது காவிரி குடிநீர் , பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நாளை முதல் துவக்கப்பட உள்ளது. எனவே மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடுகளை செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

 

காவிரியில் மேகதாது மட்டும் பிரச்சனை அல்ல, நான் இதை 30 ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து வருகிறேன், காவேரி தொடர்பான தீர்ப்பாயத்தை நடத்திய அனுபவம் தனக்கு உண்டு. காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீர் தமிழகத்திற்கு  வழங்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் பிரச்சனை எழுப்பவில்லை. உச்சநீதிமன்றத்திலும் இப்பிரச்சனை எழுப்பவில்லை. எனவே கர்நாடகா துணை முதலமைச்சர் ஏதோ ஒரு பிரச்சனை எழுப்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகின்றார். எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு மேகதாது பிரச்சனையை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது. இந்த பிரச்சனையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும். 

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் அப்பகுதி மக்களின் நலன் கருதி சாலை அமைக்க  வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அப்பகுதியில் சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சித்தராமையா மீது பா.ஜ.க பகிரங்க குற்றச்சாட்டு - என்.ஐ.ஏ விசாரிக்க வலியுறுத்தல்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

BJP blames Siddaramaiah; insists on NIA investigation

 

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஹூப்பள்ளியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தென்னிந்திய இஸ்லாமிய மத தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, அந்த மேடையில் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் ஆதரவாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையா ஐஎஸ் ஆதரவாளர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் கருத்து தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “முதல்வர் சித்தராமையா ஹூப்பள்ளியில் நடந்த மாநாட்டில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். தன்வீர் பீரா ஒரு பயங்கரவாத அனுதாபி. அவர் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பைக் கொண்டவர்” என்று கூறினார். இதனை மேற்கோள் காட்டி இந்த விவகாரத்தை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க,வின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி கோரிக்கை வைத்துள்ளார்.

 

மங்களூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவேந்தல் கூட்டம் நேற்று (06-12-23) நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ., சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஹூப்பள்ளியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டில் ஐஎஸ் ஏஜெண்டு கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடைய நபருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். ஒரு அரசு நிகழ்ச்சியில் அவருடன் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார். இந்த விவகாரத்தை சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும். அந்த நிகழ்ச்சியில் இருந்தவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பச்சை மிளகாய் திருடர்களுக்கு கட்டி வைத்து தண்டனை! - ஒரு கிராமத்தின் ஆவேசம்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Punishment for green chili thieves!

 

கர்நாடகாவில் பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களைப் பிடித்து, தர்ம அடி கொடுத்து, தூணில் கட்டி வைத்த கிராம மக்கள், கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.  

 

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளையும் பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு, அதிக விலையும் கிடைத்து வருவதால், விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்தப் பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வரும் நிலையில், லக்ஷ்மேஷ்வர் தாலுகாவில் உள்ள யட்டினஹள்ளி கிராமத்தில், விளை நிலங்களுக்குள் புகுந்து பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்து,  தர்ம அடி கொடுத்ததுடன், தூணில் கட்டி வைத்து கடும் தண்டனை வழங்கியிருக்கின்றனர். 

 

Punishment for green chili thieves!

 

கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில், பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில்,  அவ்வப்போது அளவு குறைந்து காணாமல் போய் இருப்பது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததால், நிலங்களைக் கண்காணித்து காவல் காத்து வந்தனர்.

 

திடீரென அதிகாலை வேளையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவன் மற்றும் மஞ்சுநாத் ஆகிய இரண்டு இளைஞர்கள் விளை நிலங்களில் புகுந்து, செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களைப் பறித்துக்கொண்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு, திருடிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, காவலுக்கு இருந்த விவசாயிகளில் சிலர், அந்த இரண்டு இளைஞர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். 

 

Punishment for green chili thieves!

 

இதனைத் தொடர்ந்து,  அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இரண்டு பேரில் ஒருவரைக் கட்டி வைத்து, மற்றொருவரை கட்டப்பட்டவனின் தோளில் மீது ஏற்றி நிறுத்திவைத்து, கடுமையாகத் தண்டித்துள்ளனர். இதன் பின்னர், இத்தகவல் அறிந்து அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்