சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (18/12/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1989 முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கி, 2021 எதிர்க்கட்சித் தலைவர் வரை சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் மூன்று பாகங்களான 'தளபதி மு.க.ஸ்டாலின் உரைகள்' என்ற நூலினை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
'தளபதி மு.க.ஸ்டாலின் உரைகள்' என்ற நூலினை வெளியிட்டார் அமைச்சர் துரைமுருகன்! (படங்கள்)
Advertisment