Advertisment

“வருமான வரித்துறையின் சோதனையை சமாளித்துதான் ஆக வேண்டும்” - அமைச்சர் துரைமுருகன்

Minister Duraimurugan comment  IT raid of Velu's house

Advertisment

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அண்ணா நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள அமைச்சருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் இந்தச் சோதனையானது நடைபெற்று வருகிறது. சோதனைக்காக மத்திய ரிசர்வ் படையினர் 200க்கும் மேற்பட்டவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காலை முதலே நடந்துவரும் இந்தச் சோதனையானது, ஏற்கனவே அமைச்சர் எ.வ. வேலு மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எதன் அடிப்படையில் வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சோதனை முடிவில் இது குறித்து முழு விவரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை எல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தின் மேலும் சில முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

duraimurugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe