Skip to main content

“உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் நாடே சிரிக்காதா?” முல்லைப் பெரியாறு ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் 

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

Minister Duraimurugan addressed press after inspected Mullai Periyar dam

 

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்கு 11.30 மணிக்கு வந்தார். அவருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வுசெய்தனர்.  

 

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “பதவியேற்று ஆறு மாதத்திற்குள்ளாக இந்த இடத்திற்கெல்லாம் வந்து ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கரோனா காரணமாக தள்ளிப்போய்விட்டது. சமீபத்தில் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கில், ஒரு சட்டம் போடப்பட்டிருக்கு. அதில், ஒவ்வொரு தினத்திற்கு ஒவ்வொரு அளவு நீர் கொள்ள அளவை குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன்படி இன்று 139.50, அதேபோல், நவம்பர் மாதம் 30ஆம் தேதி 142 வரை வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமீபத்தில் வந்ததால் பெரிய அளவில் வெளியே தெரியாமல் போயிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் நீர் திறக்கப்பட்டது. அதனால் தான் இந்தக் குழப்பங்கள். இது நீண்ட கால பிரச்சனை. 1979ல் இந்தப் பிரச்சனை வந்தபோது வழக்குக்கு சென்றது. அதில், தற்காலிகம், இடைக்காலம், நீண்டகால திட்டம் என மூன்று திட்டங்கள் வந்தது. அதனை அனைத்தும் செய்து முடித்தோம். அவை எல்லாவற்றையும் முடித்து நாங்கள் 152, 142 அடி வரை நீர் கொள்ள அளவை உயர்த்தவேண்டும் என்று கேட்டபோது, பேபி அணையை சரி செய்ய வேண்டும் என்றனர். இன்று தான், பேபி அணையை பார்த்துவிட்டுவந்தேன். அதன் கீழ் மூன்று மரங்கள் இருக்கின்றன. அதனை அகற்ற கேரளா அரசிடம் கேட்டால், அது வனத்துறையிடம் இருக்கிறது என்கிறார்கள். வனத்துறையிடம் கேட்டால், ரிசர்வ வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகையால், அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த மூன்று மரங்களும் அகற்றிவிட்டு அந்த அணையை சரி செய்துவிட்டு, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள 142க்கு செல்வோம். 

 

முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து பேச ஓ.பி.எஸ்.க்கும், ஈ.பி.எஸ்.க்கும் தார்மீக உரிமை கிடையாது. அவர்கள் இருவரும் இந்தத்துறைக்கு மாறி மாறி அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த பத்தாண்டு காலத்தில், இந்தத் துறை அமைச்சர் என்றாவது ஒரு நாளாவது இந்த அணையை வந்து பார்த்திருக்கிறார்களா?

 

நான் இந்த 80 வயதில், படிக்கட்டு ஏறமுடியாமல் தட்டி தட்டி ஏறிச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். அவராவது சேலத்துக்காரர். இவர் தேனிகாரர். இவர்கள் போய் பார்க்காமல் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் நாடே சிரிக்காதா?” என்று தெரிவித்தார். 

 

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், பேபி அணையில் இருக்கும் மரங்கள் ஏழு ஆண்டுகளாக இன்னும் வெட்டப்படாமல் இருக்கின்றதே? என்று கேட்டதற்கு, பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன், “நான் வந்து ஆறு மாதங்கள் ஆகின்றது. இப்போது அனுமதி வாங்கி விடுவேன். எந்தப் பத்திரிகையாளர்களையாவது அவர்கள் சந்தித்ததுண்டா.?  உண்ணாவிரதம் இருக்கும்போது அந்தப் பக்கம் போய் அவர்களிடம் கேட்டுவிடுங்கள். என்ன சொல்றாங்க  பார்க்கலாம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பெரியவர் மோடி... சீதைக்கு சித்தப்பா...” - தன் ஸ்டைலில் விளாசிய அமைச்சர்  துரைமுருகன்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Duraimurugan speech on Candidate intro meeting in vellore

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகக் கூட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “யாராக இருந்தாலும் அண்ணா பேரை சொன்னால் தான் தமிழகத்தை ஆள முடியும்.

தி.மு.க.வை நசுக்கிடுவோம் என மோடி பேசுகிறார், நாங்கள் என்ன மகாபலிபுரம பாறையா நசுக்க. நாங்க படா படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது. ராஜகோபால ஆச்சாரியர் எங்களை மூட்டை பூச்சி போல் நசுக்குவேன் என்றார் அவரையே நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம்.

லால்பகதூர் சாஸ்திரி, தனிநாடு கேட்டால் கட்சியை தடை செய்வேன் என்றார். அதை சாமர்த்தியமாக முறியடித்தவர் அண்ணா. அண்ணாவை மட்டும் கலைஞர் சந்திக்காமல் இருந்திருந்தால் கலைஞர் கம்யூனிஸ்ட் வாதியாகி இருந்திருப்பார். அவர் ஒரு சமூகநீதிக்காரர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கத்திலிருந்து அப்போது கல்லூரி சார்பில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தார்கள். நான் இதனை உடனடியாக கலைஞரிடம் போய் சொன்னேன். அதற்கு கலைஞர், ‘எம்.ஜி.ஆர். திரையில் ஆற்றிய தொண்டுக்கு டாக்டர் பட்டத்திற்கு மிக பொருத்தமானவர். நீயே அதை முன்மொழிந்து செய்ய வேண்டும்’ என சொன்னார். இதை அப்படியே எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, ‘தலைவரா அப்படி சொன்னார்’ என மிக உருக்கமாக பேசினார் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்பதை தடுத்து வழங்கச் செய்தவர் கலைஞர்.

தி.மு.க.வை பார்த்து நசுக்கி விடுவேன் உடைத்து விடுவேன் என பேசுகிறார் பெரியவர் மோடி. தி.மு.க.காரன் வெளியில் வரும்போது வாயில் வாய்க்கரிசியைப் போட்டுக் கொண்டு வருபவன். எதற்கும் துணிந்தவன். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் ஏன் சொன்னதையே திரும்ப திரும்ப மேடைகளில் சொல்கிறோம் என்றால். திரும்பத் திரும்ப சொல்லவில்லை என்றால் சீதைக்கு சித்தப்பா ராவணன் என்று விடுவார்கள்” எனப்  பேசினார்.