Skip to main content

அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தாமதம்-விவசாயிகள் குற்றச்சாட்டு

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்தது. பின்னர் அந்த தண்ணிர் கும்பகோணம் அருகேயுள்ள கீழணைக்கு வந்தடைந்தது இதனை 11-ந்தேதி பாசனத்திற்காக கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கீழணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், அரசின் கொரடா ராஜேந்திரன், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை, சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.

 

Minister delays opening of irrigation water due to foreign trip-Farmers allegation

 

பின்னர் இதுகுறித்து அமைச்சர் சம்பத் கூறுகையில், கீழணையில் இருந்து விவசாயிகளின் பாசன்த்திற்கு விகிதாச்சாரம்  அடிப்படையில் வடவாறு வாய்க்கால் மூலம் 1800 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி, தெற்குராஜன் வாய்காலில் 400 கனஅடி திறக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்திற்கு நேரடிப் பாசனமாக வடக்கு ராஜன் வாய்க்கால் கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், வடவாறு வாய்க்கால் உள்ள மொத்தம் 47 ஆயிரத்து 997 ஏக்கர் பாசன பரப்பும், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு கொள்ளிடம் தெற்கு ராஜ வாய்க்கால், குமுக்கிமன்னியார், மேலராமன் வாய்கால், விநாயகன்தெரு வாய்கால்கள் மூலம் நேரடிப் பாசனமாக மொத்தம் 39 ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பிற்கு பாசன வசதி பெறுகிறது. மூன்று மாவட்டங்களில் மொத்தம் 87 ஆயிரத்து 47 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அவ்வபோது  பாசனத் தேவைகேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு வாய்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். விவசாயிகள் போதுமான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

 

Minister delays opening of irrigation water due to foreign trip-Farmers allegation

 

முன்னதாக  வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு ராதா மதகு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 10 கனஅடியும், வீராணம் புதிய மதகு வழியாக 74 கனஅடியும்,  ஏரியில் உள்ள மொத்தம் 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்துவைத்தனர். இதன்மூலம் காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 102 கிராமங்களில் 44856 ஏக்கர் பாசன பரப்புகள் பயனடையும்.

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு காலங்கடந்து தண்ணீர் திறந்திருந்தாலும் மகிழ்ச்சியே. ஏரிக்கு  கடந்த மாதம் 22-தேதி தண்ணீர் வந்த போதே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் சார்பாகவும். விவசாய சங்கங்களின் சார்பாக கேட்டும் திறந்து விடவில்லை.  தற்போது தண்ணீர் கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக வீணாக கடலில் விடுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். மேலும் மாவட்ட  அமைச்சர் வெளிநாட்டில் சுற்று பயணத்தில் இருந்ததால்தான்  தண்ணீர் திறக்க காலதாமதம். தண்ணீர் ஏரிக்கு வந்தவுடன் திறந்திருந்தால் அனைத்து விவசாயிகளும் நாற்று விட்டு நடவு நட்டிருப்போம்.

 

Minister delays opening of irrigation water due to foreign trip-Farmers allegation


தற்போது நேரடி நெல் விதைப்பால் களை எடுத்து மாளாது. களை கொல்லி மருந்து அடிப்பதால் மண் மலடாகும். விவசாயிகள் நாங்கள் என்ன பாவம் செய்தோம். நெல்லுக்கும் போதிய விலை கிடைப்பதில்லை. தற்போது குடிமராமத்து பணி பெயரலவில்தான் நடைபெற்றுள்ளது. அந்த பணியும் பாதியிலேயே நிற்கிறது. இனி வரும் காலங்களிலாவது விவசாயிகள்  தண்ணீர் கேட்கும் போது கொடுக்க வேண்டும். வேளாண்மை துறையின் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு அனைத்து இடுபொருட்களும் வழங்கிட வேண்டும். ஒரு சில வாய்கல்களில் உடைப்பு மற்றும் தண்ணீரே பாசனத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு உள்ள வாய்கால்களை போர்கால அடிப்படையில் அதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று வீராணம் ஏரி பாசன சங்க தலைவர் பாலு, ராதா வாய்கால் பாசன சங்க தலைவர் ரெங்கநாயகி உள்ளிட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.


                   

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.