Advertisment

Minister CV Shanmugam inaugurates Gomukhi Dam

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் பெய்த மழையால் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி‌ அணை தற்போது 44 அடியை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து இன்று அமைச்சர் சிவி.சண்முகம் விவசாய பாசனத்திற்காக 110 கன அடி தண்ணீரைதிறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.