Skip to main content

'பூமிதான நிலத்தை மீட்டு பட்டா கொடுத்த முதல்வர்'-கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

Minister Chakrapani's speech at the village council meeting, 'chief Minister who reclaimed the land and gave the lease'



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் சத்திரப்பட்டி ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ''ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக மாற்று மரங்களை அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற பிரதிநிதிகளும், உறுப்பினர்களும் நடவேண்டும்.

 

Minister Chakrapani's speech at the village council meeting, 'chief Minister who reclaimed the land and gave the lease'

 

அதேபோல் தும்மலபட்டி, கேதையறும்பு பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு அம்பிளிக்கை, கொத்தையம் பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். அதன் மூலம் விவசாயிகளுக்கு மின்சாரம் நல்ல முறையில் கிடைக்கும். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் வந்தபோது 930 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு கொண்டு வந்து செயல்படுத்த இருப்பதாக கூறியிருக்கிறார். இப்படி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். உங்களுக்கு என்ன தேவையோ நாங்கள் செய்யவும் தயாராக இருக்கிறோம். மாவட்ட நிர்வாகம் தற்போது நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமாக பூமிதான நிலத்தை எடுத்து இந்த 16 மாதத்தில் ஆயிரம் பேருக்கு பட்டா கொடுக்கவும் முதல்வர் ஏற்பாடு செய்திருக்கிறார்'' 'என்றார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், ஒன்றியக் குழு  பெருந்தலைவர் அய்யம்மாள்,ஒன்றியக் குழு துணைத் பெருந்தலைவர் காயத்ரி தேவி தர்மராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா பழனிச்சாமி,ஊராட்சி மன்ற தலைவர் சாரதா சிவராஜ், துணைத் தலைவர் முருகானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சிக்காரர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.