Skip to main content

2,410 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Minister Chakrabani issues appointment order to 2410 people

 

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பயிற்சி வழிகாட்டு மையம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 2,410 பேருக்குப் பணி நியமன ஆணையை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.

 

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 7,020 பேர் பங்கேற்றனர். முகாமில் 175 நிறுவனங்கள் பங்கேற்று பணியாளரைத் தேர்வு செய்தன. அதன் மூலம் மொத்தம் 2,410 பேருக்குப் பணி நியமன ஆணையை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

 

Minister Chakrabani issues appointment order to 2410 people

 

அதன்பின் வேலைவாய்ப்பு முகாமில் உணவு மற்றும் வழங்கல்  துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுபவர்களில் ஆண்களும், பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் சேர்த்து ஆக மொத்தம் 7 ஆயிரத்து 20 பேர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 2 ஆயிரத்து 410 பெயர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலை வழங்கும் பணி இன்று முடியவில்லை. படிக்காதவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு அவர்களுக்குப் பணி கிடைக்க முயற்சி எடுக்கப்படும்.

 

பணியை விரும்பாதவர்களுக்கு அவர்கள் விரும்பும் பணி கிடைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். அரசுப் பணியைத்தான் பெரும்பான்மையான இளைஞர்கள் விரும்புகின்றனர். அதற்காக ஒட்டன்சத்திரத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.போன்ற அகில இந்திய பணிகளின் தேர்வுக்கான பயிற்சி மையம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையம் வாரியம் நடத்தும். தொகுதி 1 முதல் அனைத்து பணிகளின் தேர்வுக்கான பயிற்சி மையமும் ஐ.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்திடும் மையமும் விரைவில் தொடங்கப்படும்” என்று கூறினார்.

 

Minister Chakrabani issues appointment order to 2410 people

 

இதில், வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சரவணன், வேலைவாய்ப்பு துறை இயக்குநர் பிரபாவதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, ஆர்.டி.ஒ. ஆனந்தி, தாசில்தார் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன் ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள், கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.