சென்னை வேப்பேரியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவ மாநாடு நடைபெறுகிறது. இதனை, தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைப்பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மாநாட்டு மலரையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், இந்திய கால்நடை மருத்துவ பேரவை தலைவர் உமேஷ் சந்திர சர்மா, துணைவேந்தர் செல்வகுமார், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.