Skip to main content

பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணிகளைத் துவங்கிவைத்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

Minister and Collector who started the work of repairing the underground sewer

 

திருச்சி மாநகராட்சியில் உள்ளே பாதாள சாக்கடைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடப்பதால் அவற்றை சரிசெய்ய தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், அதனை 65 வார்டுகளிலும் சீரமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு இன்று (26.07.2021) அதற்கான துவக்க விழா உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்பணிகளைத் துவங்கி வைத்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

இந்தப் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்குப் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 377.21 கோடி மதிப்பீட்டில் 3 பணிகளும் மற்றும் 335.07 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்சி நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் 1987 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 34 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுவதோடு கசிவு ஏற்படுகிறது.

 

இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் நகர திட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் 18 வார்டுகளில் முழுவதுமாக 16 வார்டுகளில் பகுதியாகவும் மொத்தம் 34 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களை மறு சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டு, 201 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கழிவுநீர் குழாய் 210 கி.மீ நீளமும், பிரதான கழிவுநீர் குழாய் நீளம் 7.24 கி.மீட்டரும், 7 லிப்டிங் ஸ்டேஷன்களும் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் 55,155 வீடுகளுக்கு இணைக்கப்படவுள்ளது. புதிய கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படுவதால் இனி மழைக் காலங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.