10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கல்வி அறக்கட்டளை சார்பாக எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் இன்று 10 ஆம்வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இதனையொட்டி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேப்பாக்கம் லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தை பார்வையிட்டு மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அத்துடன் உதயநிதி ஸ்டாலின் கல்வி அறக்கட்டளை சார்பாக மாணவிகளுக்கு எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினார்.