Skip to main content

“மத உணர்வுகளை புண்படுத்தக் கூடிய வேலையை செய்பவர்கள் பாஜகவினர்” - அமைச்சர் அன்பில் மகேஷ்    

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

minister Anbil Mahesh talk about bjp

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் செந்தில் வேல் எழுதிய ‘நான் ஏன்  பா.ஜ.கவை எதிர்க்கிறேன்" எனும் நூல் அறிமுக விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.     

 

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, “சந்திரயான் 3 வெற்றி பெற்றதற்கு மோடிதான் காரணம் என விளம்பரம் செய்பவர்கள், அதன் வெற்றிக்கு காரணம் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள்தான் என்பதை சொல்வதில்லை. மதங்களையும், மக்களின் வாழ்வியலையும் பிரித்துணரும் குணம் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழர்கள் இயற்றியுள்ள பக்தி இலக்கியங்கள் கூட அறத்திற்கும், தமிழுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் நாங்கள் இஸ்லாமிய பகுதியில் பேசும்போது பாங்கு சத்தம் ஒலித்தது. உடனே எங்கள் பேச்சை நிறுத்தினோம். சத்தம் முடிந்தவுடன் மீண்டும் எங்கள் உரையை தொடங்கினோம். இதுவே நாளை பாஜக ஆளுகின்ற நிலை வந்தது என்றால் இவர்கள் நிறுத்த மாட்டார்கள்; பாங்கு சத்தத்தை நிறுத்த ஒரு கூட்டம் ஓடிச்செல்லும். மத உணர்வுகளை புண்படுத்தக் கூடிய வேலையை செய்பவர்கள். அதனால்தான் அவர்களை நான் எதிர்க்க வேண்டும் என சொல்கிறேன்.     

 

மணிப்பூர் கலவரத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஆளும் பா.ஜ.க முதலமைச்சர் எவ்வித அக்கறையும் இல்லாமல் ‘இதுபோல் தினசரி ஏராளமான சம்பவங்கள் நடக்கிறது. எல்லாவற்றையும் எப்படி கண்காணிக்க முடியும்’ எனக் கேட்டுள்ளார். இவர்களுக்கு ஏன் எடப்பாடி பழனிசாமி ஒத்துழைப்பு வழங்குகிறார் என்றால், அவரும் இதே போல கேட்டவர்தான்.  தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தின் போது, ‘நானே செய்தி சேனல் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என மணிப்பூர் முதலமைச்சர் போல அக்கறையின்றி சொன்னவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.  இந்தியா கூட்டணி வென்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று சொல்லியுள்ளார் முதலமைச்சர்” என பேசினார்.   

 

இந்த விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.