Advertisment

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை; நிறைவேற்றிய அமைச்சர்

Minister Anbil Mahesh started the city bus operation in response to public demand

Advertisment

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாறைபேரூராட்சி பகுதி மக்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் திருவெறும்பூர் வழியாக கூத்தைப்பாறைபேரூராட்சி வரைஅரசு மாநகர பேருந்து இயக்கக் கோரி நீண்ட நாட்களாககோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிசத்திரம் பேருந்து நிலையம் முதல் திருவெறும்பூர்வழியாக கூத்தைப்பாறைநோக்கிபுதிய மாநகர பேருந்தை மக்களின் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகரன்,மாவட்டக் குழு துணைத்தலைவரும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கருணாநிதி, கூத்தைப்பாறைபேரூராட்சி தலைவர் செல்வராஜ், கூத்தைப்பாறைபேரூர் கழகச் செயலாளர் தங்கவேல்,போக்குவரத்து கழக அதிகாரிகள் பொது மேலாளர் சக்திவேல், கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், கிளை மேலாளர் பால் கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe