Skip to main content

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டம்..!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

mini marathon conducts for creating awareness for 100% voting

 

சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இணைந்து, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் தொடர் ஓட்டம் நடத்தியது. இந்த ஓட்டம் சிதம்பரம் நகரம் தெற்கு வீதியில் தொடங்கி மேலவீதி, வடக்குவீதி, கீழ வீதி வழியாக அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இதனை கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

பின்னர் காவல் கண்காணிப்பாளர் இந்தத் தொடர் ஓட்டத்தில் காவல்துறையினருடன் கலந்துகொண்டார். 6 கிமீ தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வாழ்த்துரை வழங்கி, முதல் மூன்று இடங்களில் வந்த இளைஞர்களுக்கு ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

 

mini marathon conducts for creating awareness for 100% voting

 

அதேபோல் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களில் வந்தவர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடர் ஓட்டத்தில் 15வது இடம்வரை வந்தவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லூரி மாணவர்கள், அரசின் விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடினார்கள். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிகழ்ச்சியில் டிஜி என்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க் நிறுவனம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் ரூ. 5 நாணயம் அடங்கிய அட்டையைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியர், சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், டிஎஸ்பி லாமேக், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.