Skip to main content

சவடு மண்ணுடன் லாரிகளைச் சிறைப்பிடித்த கனிமவள அதிகாரி... வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழிக்கும் காவல் நிலையம்!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

mineral officers soil truck ramanathapuram district


உயர்நீதிமன்ற ஆணைய மீறி, உரிய அனுமதியின்றி சவடு மண் அள்ளிய இரு டிப்பர் லாரிகளை மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கனிமவள துறையினர் ஒப்படைத்த நிலையில், இன்று வரை வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருகின்றது உள்ளூர் காவல்துறை. இதனால் கனிமவளத்துறை வட்டாரத்தில் காவல்துறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 

 

mineral officers soil truck ramanathapuram district


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்டது உப்பூர் அனல் மின் நிலையம். 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில் நுட்பத்துடன், ரூ.12,200 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1,600 மெகா வாட் மின் உற்பத்திக்காக தலா 800 மெகா வாட் அலகுகள் அமைக்கும் பணி தமிழக அரசால் துவக்கப்பட்டு தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த அனல் மின் நிலையப் பணிகளை லார்சன் & டர்போ (L&T), பெல் (BHEL) மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயலாற்றி வந்தாலும், இவர்களின் பணிகளைக் கண்காணிப்பது தமிழ்நாடு மின்வாரியமே. அனல் மின் நிலையங்களுக்கு கடல் நீரைக் கொண்டு வந்து, பின் அதனின் கழிவுகளை மீண்டும் கடலில் கொட்ட அனல் மின் நிலையத்திலிருந்து 7.8 கி.மீ தூரத்திற்கு பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள லார்சன் & டர்போ நிறுவனம் தற்பொழுது 2 கி.மீ.தூரத்திற்கு மண்ணைக் கொட்டி பாதையை அமைத்து, பாலப் பாதையின் தொடர்ச்சிக்காக அருகிலுள்ள இடங்களில் அனுமதியின்றி அள்ளப்பட்ட சவடு மண்ணைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு உண்டு.
 

mineral officers soil truck ramanathapuram district


இந்நிலையில், லார்சன் & டர்போ நிறுவனத்திற்காக கடந்த 9- ஆம் தேதி தேதியன்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், முனியசாமி கோவில் அருகில் உயர்நீதிமன்ற ஆணையை மீறி, உரிய அனுமதியின்றி இரண்டு டிப்பர் லாரிகளின் துணைக்கொண்டு சவடு மண்ணை அள்ளியது ஒரு டீம். இதுக்குறித்து அனுமதியின்றி மண்ணை அள்ளுகிறார்கள் எனத் தமிழ்நாடு மின்வாரியத்தினர் மூலமாக மாவட்ட கனிம வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த கனிமவளத்துறையின் உதவி இயக்குநர் சபீதா சவடு மண்ணுடன் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து அருகிலுள்ள திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 
 

mineral officers soil truck ramanathapuram district

 

ஆனால், இன்று வரை இதுக் குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை காவல் நிலையத்தார். இதனால் கோபமடைந்த கனிம வளத்துறையினர் தங்களது மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அமைதிகாத்து வருகின்றனர். இதே வேளையில், "லார்சன் & டர்போ நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திலுள்ள சில அதிகாரிகள் துணை போவதாலே மணல் திருட்டு நடைப்பெற்று வருகின்றது. இதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் தொகையோ பல லட்சங்களுக்கு மேல் இருக்கும். இந்த லஞ்சம் அனைத்துத் துறைகளுக்கும் செல்வதால் தான் இதனை ஏனோ கண்டுகொள்ளவில்லை." என்கின்றனர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள். காவல் நிலைய வட்டாரமோ, "திருவாடனை டி.எஸ்.பி. இன்னும் வழக்குப் போட அனுமதிக்கவில்லை. அவர் கூறினால் மட்டுமே வழக்குப் போடுவோம்." என்கின்றனர்.

இது குறித்து விரிவான விளக்கத்தைத் தர வேண்டியது மாவட்டக் காவல்துறையின் பணி. விளக்கம் தருவார்களா எனக் கடுமையான விமர்சனங்களுடன் கேள்வியெழுப்புகின்றனர் கனிமவளத்துறையினர். விளக்கம் கிடைக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது