லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ தொடங்கியது கலைஞரின் இறுதிப்பயணம்!!

kalaingar

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் இன்று காலை வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காந்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

தற்போது கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.அவரது உடல் ராணுவ மரியாதை உடன் ராணுவவாகனத்தில் ஏற்றப்பட்டுபல்லாயிரம் தொண்டர்கள், மக்கள் படைசூழ கண்ணீர் நிறைந்தமுழக்கங்களை கேட்டுக்கொண்டேதனது இறுதிப்பயணத்தைதொடங்கினார் கலைஞர்.

kalaingar merina
இதையும் படியுங்கள்
Subscribe