Skip to main content

சுற்றுசுவர் எழுப்பி டாஸ்மாக் கடையை மூடிய ராணுவ வீரர்!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
tasmac


டாஸ்மாக் வருமானத்தால் தான் அரசாங்கமே நடக்கிறது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம் என்கிறார் ஒரு அமைச்சர். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் எல்லாம் கடைகளை மூடுகிறோம். இதுவரை 800 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம் என்கிறார் மற்றொரு தமிழக அமைச்சர். ஆனால், புதிய புதிய இடங்களில் எல்லாம் கடைகளை திறந்தபடி தான் உள்ளது அரசாங்கம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இடத்தின் உரிமையாளர்கள் கடையை காலி செய்யுங்கள் என்றால் செய்ய மறுத்துவிடுகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் அப்படி காலி செய்யச் சொல்ல டாஸ்மாக் நிர்வாகம் கடையை காலி செய்யாமல் போக்குகாட்டியதால் கடுப்பாகி கடையை சுத்தி சுவர் எழுப்பி அதிரவைத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக இயங்கி வருகிறது டாஸ்மாக் மதுபான கடை. இந்த கடை செயல்படும் இடத்தின் உரிமையாளர் ஜெய்பிரபு, இராணுவ வீரராக உள்ளார். இவர் ஊருக்கு வரும்போதுயெல்லாம் தெரியாமல் கடையை வாடகைக்கு விட்டுவிட்டோம், இதனால் பல பிரச்சனைகள் வருகிறது. அதனால் கடையை காலி செய்யுங்கள் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடிதம் தந்துள்ளார்.
 

tasmac


டாஸ்மாக் நிர்வாகமோ காலி செய்ய மறுத்துவிட்டது. டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள், வேறு இடம் பார்த்து போகவும் மறுத்துவிட்டனர். இதில் கோபமான இடத்தின் உரிமையாளர் ஜெய்பிரபு பொருத்தது போதுமென அந்த கடையை சுற்றி சுவர் எழுப்பி யாரும் உள்ளே போக முடியாதபடி செய்துவிட்டார். இது என் இடம் நான் எங்கே வேண்டுமானாலும் சுவர் கட்டுவேன் எனச்சொல்லிவிட்டார். இதற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர்.

இன்று செப்டம்பர் 2ந்தேதி காலை முதல் இடத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். கடையை காலி செய்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு என்றதால் என்ன செய்வது எனத்தெரியாமல் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.