வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலை பார்த்துவந்த வடமாநிலத்தொழிலாளர்கள் ஊரடங்கின் காரணமாக வேலையிழந்து தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச்செல்ல முயற்சித்து வருகின்றனர்.

Advertisment

Advertisment

சென்னையில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்குத் தமிழக அரசு அனுப்பிவருகிறது. இருப்பினும், நேற்றைய தினம் வடமாநிலத் தொழிலாளர்கள் சென்னை பல்லவன் நிலையம் அருகே அனுமதி இன்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல நடந்து வந்துள்ளனர். அவர்களை மறித்து விசாரித்த போலீசார்,பேருந்து மூலம் மீண்டும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.