Skip to main content

கிராமக் கோவிலில் நள்ளிரவு கொடை விழா... ஊரடங்கை மீறியதாக 8 பேர் மீது வழக்கு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

Midnight donation ceremony at the village temple ...

 

தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் அருகே உள்ளது கல்லூரணி ஊராட்சி. இதற்குட்பட்ட சின்னத்தம்பி நாடார்பட்டி கிராமத்திலிருக்கும் ஸ்ரீ சக்திபோத்தி சுடலைமாடசாமி கோவிலில் கொடைவிழா வருடம் தோறும் ஆடி மாதத்தின்போது நடைபெறுவது வழக்கம். அது சமயம் கிராம மக்கள் திரண்டு வந்து வழிபடுவார்கள். வழக்கம் போல் இந்த வருட ஆடி மாத கொடைவிழா கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கொடைவிழாவாக நடந்திருக்கிறது.

 

அன்றைய தினம் கொடைவிழாவில் வழக்கம் போல் நள்ளிரவு நேரத்தில் சாமியாடிகள் சாமக்கொடையான கோவிலுக்கு வெளியே வேட்டைக்குச் சென்றவர்கள், காட்டுப்பக்கம் உள்ள ஏதோ ஒரு பொருளை எடுத்துக் கொண்டு ஆடியபடி திரும்பியிருக்கின்றனர். இந்தக் காட்சியை சிலர் செல்ஃபோனில் படம் பிடித்து வெளியிட அது வைரலாகி இருக்கிறது. அதே சமயம் இந்தக் காட்சிகள் கேரளாவிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இந்தத் தகவல் வெளியேற, இதையடுத்து கிராமக் கொடை விழாவில் விதியை மீறி நடந்ததாக கல்லூரணி வி.ஏ.ஓ. விநாயகம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அதனடிப்படையில் விசாரணை செய்த போலீசார் கரோனா ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், கொடை விழாவிற்கான முன் அனுமதியை காவல் துறையினரிடமிருந்து பெறாமல் விழா நடத்தியதாக கிராம நிர்வாகிகள் மற்றும் சாமியாடிகள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் துறை போலீசாரைத் தொடர்புகொண்ட போது முன் அனுமதியின்றி ஊரடங்கு விதியை மீறி கொடைவிழா நடத்தியதன் காரணமாக விழா நடத்திய நிர்வாகிகள் சாமியாடிகள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முடித்துக் கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.