Skip to main content

கரோனா தடுப்பில் ஆசிரியர்களைப் பயன்படுத்த தடை விதிக்க முடியாது! -உயர் நீதிமன்றம்! 

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

சென்னை உயர்நீதிமன்றம்

 

கரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த தருணத்தில் ஆசிரியர்கள் ஒரு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனுவில், சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். ஆசிரியர்களுக்கு போதுமான வசதி செய்து தராமல், குறிப்பாக கவச உடை, மாஸ்க், கிருமி நாசினி, கழிப்பிட வசதி, தங்குமிட வசதி என எந்த ஒரு வசதியும் இல்லாமல், அவர்களைப் பணியில் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்.  ஆசிரியர் பணியை தவிர வேறு பணிக்கு பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடக்கோரி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்,  ‘ஆசிரியர்கள் களப்பணிக்கு அனுப்பப்படுவது இல்லை. தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களைக் கண்காணிக்கும் பணிகளைத்தான் மேற்கொள்கின்றனர். ஆசிரியர்கள் நேரடியாக களத்திற்கு செல்வதில்லை. அவர்கள், அலுவலக ரீதியான வேலைதான் பார்க்கின்றனர். மேலும், உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டார்.

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஆசிரியர்களும் பொது ஊழியர்தான். அவர்களுக்கும் நாட்டின் மீது அக்கறை இருக்க வேண்டும். அவர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்.. தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பெண் காவலர்களும் பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த தருணத்தில் பணிபுரிய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு உரிய பாதுகாப்பு வசதிகளைத் செய்து தந்துள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இருவேறு சம்பவங்களில் சஸ்பெண்டான இரண்டு அரசு ஆசிரியர்கள்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

Two government teachers suspended in two separate incidents

 

விழுப்புரம் மாவட்டத்தில் பார்ட்னர்ஷிப் முறையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாகக் கூறி 26 பேரிடம் இரண்டரை கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட நாவர்குளம் பள்ளி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராமசாமி அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உத்தரவிட்டுள்ளார்.  

 

அதை அடுத்து கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம் இடிப்பது சம்பந்தமாக அதில் செயல்பட்டு வந்த ஆய்வுக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தபோது அங்கிருந்த ஆசிட் பாட்டில் தவறி விழுந்து 4 மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாராமன் அலட்சியமாகச் செயல்பட்டதால் தான் மாணவிகளுக்கு ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த காரணத்திற்காக தலைமையாசிரியர் ராஜாராமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா. 

 

 


 

Next Story

கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்தபின்புதான் ஏற்போம்: அரசின் நிலைப்பாட்டை வரவேற்ற ஆசிரியர்கள்!!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

We will only accept amendments to education policy; Teachers to welcome the government's position !!

 

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தைக் கரோனா நிவாரண நிதிக்காக எடுத்துக்கொள்ளும் அரசாணையை வெளியிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன், தற்போது வேகமாக பரவிவரும் கரோனாவின் தாக்கம் பலரது குடும்பங்களை சின்னாபின்னமாக்கிவருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிகளை செய்வதற்கு போதுமான நிதி ஆதாரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திரட்டிவரும் நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகிய எங்களுடைய மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை மனமுவந்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

 

எனவே, அதற்கான அரசாணையை தாங்கள் விரைவில் வெளியிட்டு நிதியைப் பெற்றுக்கொள்ளுமாறு இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதை வரவேற்கிறோம். அதேபோல் தமிழக அரசு முன்வைத்துள்ள திருத்தங்களை செய்தபின்புதான் மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்போம் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஆசிரியர்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.