Skip to main content

திரையில் எம்.ஜி.ஆர்.! நிஜத்தில் கே.டி.ஆர்.! -நிறைவேறிய ‘பாக்ஸிங்’ கனவு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

“மனதுக்குள் முடிந்து வைத்த ஆசை போலும்..” என்றார் பத்திரிகை நண்பர் ஒருவர், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் குத்துச்சண்டை போட்டியைத் தொடங்கி வைத்து,  தானும் ஆர்வத்தோடு கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டு குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் ‘சும்மாகாச்சும்’ சண்டையிட்ட போது.

 

MGR on screen! KTR in real time! Boxing is a dream come true!

 

‘கமல்ஹாசனோடு அரசியல் ஸ்டண்ட்.. ‘மோடி-டாடி’ போன்ற பஞ்ச் டயலாக்குகள்..   இதெல்லாம் வழக்கமானதுதான்.  குத்துச்சண்டை  ‘வேறமாதிரி’ தெரிகிறதே?’ என்று கேட்டபோது, கே.டி.ராஜேந்திரபாலாஜியின் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் எடுத்துவிட்டார்.

“எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட நாள் 1967, ஜனவரி 12. அதே ஆண்டு,  செப்டம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வந்த காவல்காரன் திரைப்படத்தில் குத்துச்சண்டை போட்டியில் வில்லன் மனோகரை வீழ்த்தி வெற்றி பெறுவார், எம்.ஜி.ஆர். அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினாலும், அவரது குரல் பாதிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகளில், அவரது வழக்கமான குரலைக் கேட்க முடியாது. குரல் உடைந்துபோய், வார்த்தைகள் தெளிவில்லாமல் ஒலிக்கும். மாறிப்போன அவரது குரலே, காவல்காரனுக்கு பெரிய விளம்பரத்தைத் தேடித்தந்தது. அத்திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.

 

MGR on screen! KTR in real time! Boxing is a dream come true!


சிறுவயதிலிருந்தே ராஜேந்திரன் (கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஒரிஜினல் பெயர்) எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். காவல்காரன் ரிலீஸானபோது, அவருக்கு மூன்று வயதுதான். அப்போதெல்லாம், சிவகாசி பகுதியில், பழைய சினிமாக்களை திரும்பத் திரும்ப டூரிங் டாக்கீஸில் திரையிடுவார்கள். அந்த நேரத்தில், காவல்காரனை பலமுறை பார்த்திருக்கிறார் ராஜேந்திரன். குறிப்பாக, வில்லன் மனோகருடன் கையில் உறை அணிந்து எம்.ஜி.ஆர். மோதும் பாக்ஸிங் காட்சியின் போது ‘விடாதீங்க வாத்தியாரே!’ என்று விசிலடித்து ஆரவாரம் செய்வார். இரவுக் காட்சி முடிந்து வீட்டுக்கு வந்து தூங்கும்போது, கனவிலும் ‘பாக்ஸிங்’ அவரை விடாது.

 

MGR on screen! KTR in real time! Boxing is a dream come true!


பேட்டிகளில் வீரதீரமாகப் பேசினாலும், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு குழந்தை மனதுதான். அதனால்தான்,  விருதுநகரில் விளையாட்டு போட்டிகளைத் துவக்கிவைத்த போது,  கைகளில் உறையை மாட்டிக்கொண்டு, குத்துச்சண்டை வீரரிடம் ‘பாவ்லா’ காட்டி மகிழ்ந்தார்.  இதற்குக் காரணம், காவல்காரனில் எம்.ஜி.ஆர். போட்ட பாக்ஸிங் ஃபைட், அவரது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதுதான்.  பார்ப்பதற்கு வேண்டுமானால் அமைச்சர் போட்ட குத்துச்சண்டை ‘சின்னப்புள்ளத்தனமா’ இருக்கலாம். இது, அவரது பலநாள் ஏக்கம்.” என்று பெருமூச்சு விட்டார், அந்த நண்பர்.

 

MGR on screen! KTR in real time! Boxing is a dream come true!

 

வாய்ப்பு கிடைத்தாலும்,  மனதிலுள்ள ஆசைகளை எல்லோராலும் நிறைவேற்றிவிட முடியாதுதான்.  அதற்கெல்லாம், ஒரு  ‘மனதைரியம்’ வேண்டும். கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு   ‘அது’  ரொம்பவே இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.