Skip to main content

வராத எம்.ஜி.ஆருக்கு திருநாவுக்கரசர் மரியாதை! வந்த கலைஞருக்கு கராத்தேதியாகராஜன் மரியாதை!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

 

கலைஞரின் 96-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உற்சாகமாக திமுகவினர் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்துள்ள கலைஞரின் பிறந்த நாள் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைஞரின் பிறந்தநாள் நிகழ்வு அறிவாலயத்திலும் கலைஞரின் நினைவிடத்திலும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்ட நிலையில்,   தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில், கலைஞரின் திரு உருவ படத்தை சத்தியமூர்த்திபவனில் வைத்து பூக்கள் தூவி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 

 

d


கலைஞரின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன்,  பவனில் இருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்சியில் தமிழக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஆர். தாமோதரன் , சர்க்கிள் தலைவர்கள் நாச்சிக்குளம் சரவணன், சைதை முத்தமிழ், மாங்கா சேகர் மற்றும்  ரகுசந்தர் ,சிவக்குமார் ,தரமணி சீனு,பட்டினம்பாக்கம் பன்னீர் , புனிதவள்ளி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடினர். 

 

சத்தியமூர்த்தி பவனில் கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கராத்தே தியாகராஜனிடம் கேட்டபோது, " காங்கிரஸுடன் எம்.ஜி.ஆர். கூட்டணி வைத்திருக்கிறார். ஆனால், ஒரு போதும் சத்தியமூர்த்திபவனுக்கு எம்.ஜி.ஆர். வந்ததில்லை. ஆனால், அந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை சத்தியமூர்த்திபவனில் கொண்டாடினார் எங்களின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு. எம்.ஜி.ஆர். படம் வைத்து அவருக்கு மரியாதையும் செய்தார்.


காங்கிரஸ் அலுவலகத்துக்கு வராத எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை பவனில் கொண்டாடப்பட்டிருக்கும் நிலையில், திமுக ஆட்சியின் போது, சத்தியமூர்த்திபவனுக்கு வருகை தந்து, மறைந்த தலைவர் ராஜிவ் காந்திக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஐ.டி.காரிடார் சாலைக்கு அவரது பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கலைஞர்.  தற்போதும் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகள்.

 

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கும் திமுகதான் காரணம். இதையெல்லம் மனதில் கொண்டுதான்,  கலைஞரின் பிறந்த நாளை சத்தியமூர்த்திபவனில் கொண்டாடினோம் " என்கிறார் உணர்வுபூர்வமாக கராத்தே தியாகராஜன்.  பவனில் நடந்த இந்த நிகழ்வு காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ,திமுக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.