Skip to main content

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பஸ் அதிபர்கள் அதிருப்தி!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018


முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா மாநில தலைநகரான சென்னையில் வரும் 30 ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு பேருந்துகளை அனுப்புமாறு அதிமுகவினர் , அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால் பல மாவட்டங்களில் உள்ள பஸ் அதிபர்கள் அதிருப்தியில் இருக்கிறார்க்ள. 

 

edapadi


பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் அமைச்சர் தலைமையில் அரசு செலவில் நடைபெற்றது. முதலில் நடந்த விழாக்களில் கூட்டம் கூடாததால் பள்ளி, கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துவந்து அமரவைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் விவகாரம் நீதிமன்றம் வரை செல்லவே தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டிப்புடன் குட்டு வைத்தது. அதிமுக தொண்டர்களை அழைத்துசெல்ல பள்ளி, கல்லுரி வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்துகளை கட்டாயப்படுத்தி மிரட்டி இலவசமாக ஆளும் தரப்பு பயன்படுத்தி கொண்டது.

 

edapadi

 

சென்னையில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் நூற்றாண்டு விழாவில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை வரவைப்பது என்று சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி கூறியிருந்தார். அதிமுக வட்டாரத்தில் ஒவ்வொரு வட்டசெயலாளரும் 200 பேரை அழைத்து வரவேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மாவட்டத்திற்கு 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வர வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. தனியார் சுற்றுலா வண்டிகளை சென்னைக்கு அதிமுகவினரை அழைத்துசெல்ல கட்டாயப்படுத்துவதாக செய்திகள் கிடைத்தது.

 

edapadi

 

பஸ் அதிபர்கள் சிலர் நம்மிடம் நிலைமையை விவரித்தனர் "  தனியார் சுற்றுலா பேருந்துகளுக்கு வருடத்தில் சில மாதங்கள் மட்டும்தான்  சீசனாகும்.  தற்போது பள்ளி விடுமுறை, புரட்டாசி மாதம் என்பதாலும் முன்கூட்டியே கோவில்கள், சுற்றுலாத் தளங்கள் செல்ல அதிக அளவில் தனியார் பேருந்துகள் புக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது. சுற்றுலா செல்லும் சில தினங்களுக்கு முன்னர் பர்மிட் வாங்குவது வழக்கம். இந்த வாரம் சுற்றுலா செல்ல பர்மிட் கேட்டு விண்ணப்பித்த போது எந்த வண்டிக்கும் பர்மிட் வழங்க கூடாது என்று அமைச்சரிடம் உத்தரவு வந்திருப்பதாக போக்குவரத்து அலுவலகங்களின் இருக்க கூடிய அலுவலர்கள் சொல்கிறார்கள். இதனால் தொழில் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் திருப்பதிக்கு மக்கள் செல்வதால் முன்கூட்டியே தரிசன டிக்கெட்கள் பதிவு செய்து இருந்ததால் தற்போது அதை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

 

 

அமைச்சர்களின் சொந்த ஊர், அதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்க கூடிய ஊர்களில் பேருந்து அதிபர்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். கோவை, ஈரோடு ,சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக அளவில் ஆட்களை கூட்டி வர வேண்டும் என்பதால் அதிக தனியார் பேருந்துகள் வர சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு மாதங்களுக்கு முன்னரே அட்வான்ஸ் பணம் வாங்கியதை எல்லாம் சங்கடத்துடன் திருப்பி தர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது, சீசன் நேரங்களில் கட்டாயப்படுத்தி பேருந்துகளை வர வைப்பது எந்த வகையில் சரியாக இருக்க முடியும்"  என்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.