Skip to main content

எம்.ஜி.ஆர். - மறைந்தும் மறையாதவர்!

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
mgr



எம்.ஜி.ஆரை பார்க்காத ஒரு புதிய தலைமுறை உருவாகி வாழ்ந்து வருகிறது. இன்றைக்கும் அவருடைய நினைவை, அவர் ஏற்படுத்திய தாக்கத்தை தவிர்க்க இயலவில்லை. அதற்கு எத்தனையோ காரிய காரணங்கள் இருக்கின்றன. 

 

எம்.ஜி.ஆர். காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார். பின்னர் அண்ணாவை பார்த்த பிறகு அவரது கொள்கைகள், அவருடைய குடும்ப பாச உணர்வு போன்றவற்றால் கவரப்பட்டு, கலைவாணர், நடிகமணி டிவி நாராயணசாமி, டாக்டர் கலைஞர் ஆகியோரது நட்பால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். 

 

20 ஆண்டுகள் திமுகவில் இருந்த அவர், பின்னர் அதிமுகவை தொடங்கினார். அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றார். அன்று திமுக, காங்கிரஸ் வலிமையாக இருந்தது. அதிமுக தொடங்கிய உடனேயே ஆட்சியை பிடிக்குமா? என்று அனைவரும் விமர்சித்தனர். 1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 

 

சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர்.  கொண்டு வந்தபோது, பிள்ளைகளை தட்டு ஏந்த வைத்துவிட்டார், இதற்கு நிதி ஆதாரம் கிடையாது, புகழுக்காக, விளம்பரத்துக்காக இதனை செய்கிறார், கொஞ்ச நாள் போடுவார்கள், பிறகு படிப்படியாக நின்றுவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் சொன்னார்கள். 

 

ஆனால் அந்த திட்டம் இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவது மட்டுமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் விரிவுப்படுத்தப்பட்டது. பல நாடுகள் அந்த திட்டத்தை பின்பற்றுகின்றன. 

 

1960, 1970களில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும், இன்றைக்கு உள்ள நிலைமை அன்றைக்கு கிடையாது. ஒரு வேளை உணவு என்பது, அதுவும் அரிசி உணவு என்பது கனவாகவும், கேள்விக்குறியாகவும் நாட்டில் பல பகுதிகளில் இருந்தன. 

 

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வருகிறார். வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்த மக்கள் அதிகம். இந்த திட்டத்தினால் பள்ளிகளில் பிள்ளைகளின் வருகை அதிகரித்தது. 

 

ஐந்து வயதை எட்டியபின்னரே குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். அதுவரை உணவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டத்தை கொண்டு வந்தார். அது இன்றும் தொடர்கிறது.

 

குறிப்பிட்ட பகுதி மக்களுக்கென தனித்தனியே நியாய விலைக்கடைகளை தொடங்கி வைத்தார். அதன் மூலம் பொது விநியோகத் திட்டத்தில் அரிசித் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்தார். அதன் மூலம் பல்வேறு மக்களும் பயன் பெற்றனர். 

 

தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளை அவர் திறந்தார். அப்போது, ''நான் இருக்கிறேனோ, இல்லையோ நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகம் உயர்கல்வியில் சிறந்து முன்னணியில் இருக்கும். சிறந்து விளங்கும். உலக நாடுகளில் நமது பிள்ளைகள் மருத்துவத்தில், பொறியியல் துறையில், தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவார்கள். பல்வேறு நாடுகளுக்கு செல்வார்கள். அவர் சொன்னப்படியே நடந்தது. அதனை புள்ளி விவரங்கள் சொல்லும்.

 

எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும் இன்றும் அவரது பெயரை வைத்துத்தான் பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.