மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் திட்டத்திற்கு ரூபாய் 611 கோடி நிதி ஒதுக்கிஅரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை. மேலும் உபரி நீரை கொண்டு எடப்பாடி, ஓமலூர் உட்பட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.