Skip to main content

மேட்டூர் அணை திறப்பு! மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Mettur Dam opens! Delta farmers happy!

 

மேட்டூர் அணையில் குருவை சாகுபடிக்காக தண்ணீரை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியாக நாகை மாவட்டம் விளங்கி வருகிறது. காவிரி நீரை நம்பியே மாவட்டத்தில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணை முன்னதாகவே நிரம்பியதை அடுத்து இன்று தமிழக முதலமைச்சர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதனால் இந்தாண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ள இயந்திரம் மூலம் உழவு செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கி வருகின்றனர்.

 

நாகை மாவட்டத்தில் 3.29 கோடி மதிப்பீட்டில் 329.90 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணிக்காக நதி‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வலிவலம் மோகனூர் சாட்டியக்குடி வாய்க்கால்கள் துார்வாரும் பணியினால் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து தூர்வாரும் பணியினை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நாகை மாவட்டத்தில் 80 சதவீத பணிகள் நிறைவேற்றுவதாக ஆட்சியர் தெரிவித்தனர்.

 

Mettur Dam opens! Delta farmers happy!

 

அதேசமயம் கடந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கரில் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்படும் குறுவை சாகுபடி இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் சாகுபடியின் பரப்பளவு இரண்டு மடங்காக 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறுமென விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததோடு கூடுதல் பரப்பளவில் குருவை சாகுபடி செய்ய நிலை உருவாகியுள்ளதால் குறுவை சாகுபடிக்கு தேவையான தரமான விதை நெல், உரம், இடுபொருள் உள்ளிட்டவைகளை வழங்குவதோடு குறுவை சாகுபடி செய்யப்படும் நெல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க உத்தரவு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Order to open water in Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் 4,715 ஏக்கரும், நாகையில் 18,059 ஏக்கரும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் முதல்வரிடம் நீர் திறக்க கோரிக்கை வைத்திருந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேட்டூரில் பாசனத்திற்கு நீர் திறப்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.